மென்பந்தாட்ட செய்தி
அவுஸ்திரேலிய ஓபன்: சானியா ஜோடி அசத்தல் வெற்றி
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 05:43.25 மு.ப GMT ]
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றுக்கு ரஷ்யாவின் மரியா ஷரபோவா, செர்பியாவின் நோவக் ஜோகோவிச் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முன்னேறி உள்ளனர்.

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் உலகின் நம்பர்-2 வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா, அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை சந்தித்தார்.

இதில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஷரபோவா 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்ற போட்டிகளில் சீனாவின் லீ நா, போலாந்தின் ரத்வன்ஸ்கா, ஜேர்மனியின் கெர்பர், செர்பியாவின் இவானோவிச், ஜேர்மனியின் ஜூலியா, ரஷ்யாவின் எகடரினா மகரோவா உள்ளிட்டோர் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்குள் நுழைந்தனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் உலகின் நம்பர்-1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-4, 6-3, 7-5 என்ற நேர் செட்களில் செக் குடியரசின் ஸ்டேபானக்கை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற போட்டிகளில் ஸ்பெயினின் டேவிட் பெரர், செக் குடியரசின் தாமஸ் பெர்டிக், தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன், செர்பியாவின் ஜான்கோ டிப்சர்விச், ஜப்பானின் கெய் நிஷிகோரி ஆகியோர் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினர்.

கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பாப் பிரையன் ஜோடி, அவுஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர், லூக் ஜோடியை சந்தித்தது.

இதில் அசத்திய சானியா ஜோடி 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
தகுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்கும் ஐ.பி.எல். வீரர்களுக்கு கட்டுப்பாடுகள்
வீரர்களுக்கு மொடல் அழகிகளை சப்ளை செய்தாரா விண்டூ? பொலிசார் திடுக்கிடும் தகவல்
சூதாட்டம் இறப்பிற்கு சமமானது: டிராவிட்
சூதாட்டத்தில் சென்னை அணி வீரர்களுக்கு தொடர்பா?
பாடல் மூலம் மௌனத்தை கலைத்தார் சாக்ஷி டோனி
ஸ்பாட் பிக்சிங்: பொலிசாரிடையே மோதல்
பொலிசாரே ஸ்ரீசாந்த்தின் பெயரை கெடுக்கின்றனர்: வக்கீல் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னையுடன் மோதப் போவது யார்? மும்பை- ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல்.தொடர் தான் எனக்கு கடைசி தொடர்: டிராவிட் சூசகப் பதில்..!
ஐ.பி.எல். சூதாட்டத் தொடர்பில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் நடுவர் நீக்கம்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 11:30.50 மு.ப ]
நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மும்பை இண்டியன்ஸ் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. [மேலும்]
ஐ.பி.எல் சூதாட்டம்: ஸ்ரீசாந்த் தோழியான நடிகை சுர்வீன் சாவ்லா அதிர்ச்சி
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 08:39.42 மு.ப ] []
ஸ்ரீசாந்த் ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கியமைக்கு, ஸ்ரீசாந்த் தோழியும் பாலிவுட் நடிகையுமான சுர்வீன் சாவ்லா அதிர்ச்சி வெளியிட்டு இருக்கிறார். [மேலும்]
சென்னை சொதப்பிய போட்டியில் சூதாட்டமா?
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 06:57.07 மு.ப ] []
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலதிகாரியான குருநாத் மெய்யப்பன் சூதாட்ட புகாரில் சிக்கியிருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சில போட்டிகள் மீதும் சந்தேகப் பார்வை வலுவாக படிந்துள்ளது. [மேலும்]
சொந்தமாக சூதாட்ட கம்பெனி தொடங்கிய ஸ்ரீசாந்த்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 05:48.15 மு.ப ] []
ஆறாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பிக்சிங் செய்த ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோருடன் ரஞ்சி கிண்ண வீரர்கள், பல்வேறு புக்கிகள் டெல்லி பொலிசிடம் பிடிபட்டனர். [மேலும்]
ஸ்ரீசாந்த்தால் 7 நிமிடத்தில் ரூ. 2.5 கோடி சம்பாதித்த சூதாட்ட தரகர்
[ புதன்கிழமை, 22 மே 2013, 12:24.42 பி.ப ]
மொகாலியில் கடந்த 9ம் திகதி நடைபெற்ற ஐ.பி.எல் பந்தயத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்த் சூதாட்ட தரகர்களுக்காக ஒரு ஓவர் பந்து வீசினார். [மேலும்]