மென்பந்தாட்ட செய்தி
அவுஸ்திரேலிய ஓபன்: சானியா ஜோடி அசத்தல் வெற்றி
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 05:43.25 மு.ப GMT ]
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றுக்கு ரஷ்யாவின் மரியா ஷரபோவா, செர்பியாவின் நோவக் ஜோகோவிச் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முன்னேறி உள்ளனர்.

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் உலகின் நம்பர்-2 வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா, அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை சந்தித்தார்.

இதில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஷரபோவா 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்ற போட்டிகளில் சீனாவின் லீ நா, போலாந்தின் ரத்வன்ஸ்கா, ஜேர்மனியின் கெர்பர், செர்பியாவின் இவானோவிச், ஜேர்மனியின் ஜூலியா, ரஷ்யாவின் எகடரினா மகரோவா உள்ளிட்டோர் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்குள் நுழைந்தனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் உலகின் நம்பர்-1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-4, 6-3, 7-5 என்ற நேர் செட்களில் செக் குடியரசின் ஸ்டேபானக்கை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற போட்டிகளில் ஸ்பெயினின் டேவிட் பெரர், செக் குடியரசின் தாமஸ் பெர்டிக், தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன், செர்பியாவின் ஜான்கோ டிப்சர்விச், ஜப்பானின் கெய் நிஷிகோரி ஆகியோர் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினர்.

கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பாப் பிரையன் ஜோடி, அவுஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர், லூக் ஜோடியை சந்தித்தது.

இதில் அசத்திய சானியா ஜோடி 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
டிராவிட்டை ஆட்டமிழக்க செய்த சூதாட்ட நடுவர்
ஸ்ரீசாந்த் வீட்டில் நுழைய முயன்ற போலி “பொலிஸ்”
கிரிக்கெட் சூதாட்டத்தை சட்டமயமாக்க வேண்டும்: பாய்காட் வலியுறுத்தல்
ஐ.பி.எல் சூதாட்டத்தில் பஞ்சாப் வீரர்கள் 8 பேர் சிக்குகிறார்கள்
கோஹ்லி, ஹர்பஜன் எனக்கு நெருக்கமானவர்கள்: விண்டூ சிங்
ஸ்ரீசாந்த் மற்றொரு தோழிக்கும் ஒரு செல்போன் பரிசு: பொலிசார் பறிமுதல்
தங்கநகை, பரிசுகள் வேண்டாம் என்று தப்பியோடிய பாகிஸ்தான் நடுவர்
பி.சி.சி.ஐ தலைவர் பதவியிலிருந்து சீனிவாசன் விலக வேண்டும்: வலுக்கிறது எதிர்ப்பு
ஐபிஎல் சூதாட்டம்: சென்னை அணியின் குருநாத் மெய்யப்பன் கைது
இறுதி சுற்றுக்குள் நுழைந்தது மும்பை அணி: 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது ராஜஸ்தான்(வீடியோ இணைப்பு)
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பாடல் மூலம் மௌனத்தை கலைத்தார் சாக்ஷி டோனி
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 05:20.54 மு.ப ]
சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட விண்டூ தாரா சிங் அருகில் டோனியின் மனைவி இருக்கும் புகைப்படங்கள் பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் வெளியாகி உள்ளன. [மேலும்]
ஸ்பாட் பிக்சிங்: பொலிசாரிடையே மோதல்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 05:08.13 மு.ப ]
ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக மும்பை மற்றும் டெல்லி பொலிசார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. [மேலும்]
பொலிசாரே ஸ்ரீசாந்த்தின் பெயரை கெடுக்கின்றனர்: சட்டத்தரனி பரபரப்பு குற்றச்சாட்டு
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:15.59 மு.ப ]
ஸ்ரீசாந்த் குறித்த செய்திகளை பத்திரிக்கைகளுக்கு பொலிசாரே கசிய விடுவதாக அவரது சட்டத்தரனி ரிபெக்கா ஜான் குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
ஐ.பி.எல். தொடர் தான் எனக்கு கடைசி தொடர்: டிராவிட் சூசகம்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 05:13.15 பி.ப ]
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது. [மேலும்]
தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 11:30.50 மு.ப ]
நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மும்பை இண்டியன்ஸ் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. [மேலும்]