துடுப்பாட்ட செய்தி
சிட்னி ஒருநாள் போட்டிக்கு ஜெயவர்த்தன கடும் எதிர்ப்பு
[ திங்கட்கிழமை, 21 சனவரி 2013, 11:56.05 மு.ப GMT ]
சிட்னி ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. இதற்கு இலங்கை அணித்தலைவர் ஜெயவர்த்தன கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியின் முடிவில், இலங்கை 2-1 என்று முன்னிலை வகித்தது. நான்காவது போட்டி சிட்னியில் நேற்று நடந்தது.

நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

இலங்கை வேகத்தில் அவுஸ்திரேலிய அணி மீண்டும் ஆட்டம் கண்டது. அவுஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 222 ஓட்டங்கள் எடுத்தது.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய இலங்கை அணியின் அணித்தலைவர் ஜெயவர்த்தன 4 ஓட்டங்களும், டில்ஷன் 9 ஓட்டங்களும் எடுத்து நல்ல தொடக்கம் அளித்தது.

இலங்கை அணி 3.2 ஓவரில் 14 ஓட்டங்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்பு போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இலங்கையின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.

ஐ.சி.சி., விளக்கம் தருமா:

இதனால் ஆத்திரம் அடைந்த அணித்தலைவர் ஜெயவர்த்தன கூறுகையில், கடந்த நவம்பரில் பல்லேகலேவில் நடந்த நியூசிலாந்துக்கெதிரான ஒருநாள் போட்டியின் போதும் மழை குறுக்கிட்டது.

மிக மோசமான நிலையில் தொடர்ந்து விளையாடினோம். அப்போது களநடுவர் இருந்த ஆன்டி பைகிராப்ட், விளையாடுவதற்கு ஆபத்தான சூழ்நிலை இருந்தால் மட்டுமே போட்டி நிறுத்தப்படும் என்றார்.

ஆனால், சிட்னி போட்டிக்கு களநடுவர் இருந்த ஸ்ரீநாத், விளையாடுவதற்கு உகந்த சூழ்நிலை இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்படுகிறது என்றார்.

இரு இடங்களிலும் வெவ்வேறான விளக்கம் அளிக்கப்பட்டது. அனைத்து தொடருக்கும் ஒரே மாதிரியான நிலையை கையாள வேண்டும் என்றும் இது குறித்து ஐ.சி.சி. களநடுவர் ஸ்ரீநாத்திடம் விளக்கம் கேட்டு முறைப்படி கடிதம் அனுப்பப்படும் எனவும் கூறியுள்ளார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
இறுதி சுற்றுக்குள் நுழைந்தது மும்பை அணி: 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது ராஜஸ்தான்(வீடியோ இணைப்பு)
தகுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்கும் ஐ.பி.எல். வீரர்களுக்கு கட்டுப்பாடுகள்
வீரர்களுக்கு மொடல் அழகிகளை சப்ளை செய்தாரா விண்டூ? பொலிசார் திடுக்கிடும் தகவல்
சூதாட்டம் இறப்பிற்கு சமமானது: டிராவிட்
சூதாட்டத்தில் சென்னை அணி வீரர்களுக்கு தொடர்பா?
பாடல் மூலம் மௌனத்தை கலைத்தார் சாக்ஷி டோனி
ஸ்பாட் பிக்சிங்: பொலிசாரிடையே மோதல்
பொலிசாரே ஸ்ரீசாந்த்தின் பெயரை கெடுக்கின்றனர்: வக்கீல் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னையுடன் மோதப் போவது யார்? மும்பை- ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல்.தொடர் தான் எனக்கு கடைசி தொடர்: டிராவிட் சூசகப் பதில்..!
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 11:30.50 மு.ப ]
நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மும்பை இண்டியன்ஸ் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. [மேலும்]
ஐ.பி.எல் சூதாட்டம்: ஸ்ரீசாந்த் தோழியான நடிகை சுர்வீன் சாவ்லா அதிர்ச்சி
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 08:39.42 மு.ப ] []
ஸ்ரீசாந்த் ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கியமைக்கு, ஸ்ரீசாந்த் தோழியும் பாலிவுட் நடிகையுமான சுர்வீன் சாவ்லா அதிர்ச்சி வெளியிட்டு இருக்கிறார். [மேலும்]
சென்னை சொதப்பிய போட்டியில் சூதாட்டமா?
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 06:57.07 மு.ப ] []
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலதிகாரியான குருநாத் மெய்யப்பன் சூதாட்ட புகாரில் சிக்கியிருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சில போட்டிகள் மீதும் சந்தேகப் பார்வை வலுவாக படிந்துள்ளது. [மேலும்]
சொந்தமாக சூதாட்ட கம்பெனி தொடங்கிய ஸ்ரீசாந்த்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 05:48.15 மு.ப ] []
ஆறாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பிக்சிங் செய்த ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோருடன் ரஞ்சி கிண்ண வீரர்கள், பல்வேறு புக்கிகள் டெல்லி பொலிசிடம் பிடிபட்டனர். [மேலும்]
ஸ்ரீசாந்த்தால் 7 நிமிடத்தில் ரூ. 2.5 கோடி சம்பாதித்த சூதாட்ட தரகர்
[ புதன்கிழமை, 22 மே 2013, 12:24.42 பி.ப ]
மொகாலியில் கடந்த 9ம் திகதி நடைபெற்ற ஐ.பி.எல் பந்தயத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்த் சூதாட்ட தரகர்களுக்காக ஒரு ஓவர் பந்து வீசினார். [மேலும்]